ஐயமும் தெளிவும்

 ஐயமும் தெளிவும்


ஐயம் : சிறுநீர் கழித்துவிட்டு உறிஞ்சும் பேப்பரினால் சுத்தம் செய்தால் கூடுமா?

தெளிவு : காகிதத்தினால் சுத்தம் செய்தால், சுத்தமாகாது. வலா யஸ்தன்ஜி பிகாஙிதின் வஇன் கானத் பைளா அ - சிறுநீர் கழித்துவிட்டு காகிதத்தால் சுத்தம் செய்தல் கூடாது. காகிதம் வெண்மையானதாக இருப்பினும் சரியே! 

பதாவா ஆலம் கீரி, பாகம் - 01, பக்கம் - 51


காகிதம் மரியாதைக்குரிய பொருள். மரியாதைக்குரிய பொருளினால் சிறுநீரை சுத்தம் செய்தல் கூடாது.(ரத்துல் முக்தார்)


ஐயம் : பொது மையவாடியில் பள்ளிவாசல் கட்டலாமா?

தெளிவு : பொது மையவாடியில் எந்தக் கட்டிடமும் கட்டக் கூடாது ஹறாம். அது பள்ளிவாசலாயினும் சரியே! அதிகாரம் பெற்றோர் கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து விடவேண்டும்.

மின்ஹாஜ், பாகம் - 01, பக்கம் - 364

முங்னி, பாகம் - 01, பக்கம் - 364

பதாவா நவவி, பக்கம் - 46


Comments

Popular posts from this blog

*மாமறை விளக்கும் மாநபி*!

அகிலத்தின் அருட்கொடை