Posts

Short

*இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி*!

Image
*இமாம்*திர்மிதி*ரஹ்மத்துல்லாஹி அலைஹி*! கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள் இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சிறந்த ஆபிதாகவும், துறவியாகவும், நிகரற்ற ஹதீஸ் துறையில் ஹாபிழாகவும் விளங்கினார்கள். மிகச்சிறந்த ஆலிமான இவர்கள் அபார நினைவாற்றல் மிக்கவராகவும் விளங்கியுள்ளார்கள். இமாம் திர்மிதி அவர்களின் கடினமான வணக்க வழிபாட்டினால் அவர்களின் இறுதிக் காலத்தில் கண்பார்வையை இழந்துள்ளார்கள் என்று ஹளரத் யூஸுப் பின் அஹ்மத் பக்தாதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் திர்மிதி அவர்கள் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவராவார். ஒரு தினம் இஇமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹிமாம் புகாரி அவர்கள் இமாம் திர்மிதியைப் பார்த்து, என்னிடமிருந்து நீங்கள் பெற்ற பயனைவிட, உங்களிடமிருந்து யான் பெற்ற பயன் அதிகம் என்று குறிப்பிட்டார்கள். இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வபாத்தான பின் குறாசான் வாசிகள் அறிவு, அமல் இரண்டிலும் இவர்களையே பின்பற்றினர் என்று இம்ரான் பின் அலான் என்பவர் கூறுகின்றார். ஆதாரம் : தஹ்தீபுத்தஹ்தீப், பாகம் - 01, பக்கம் - 388 இம...

*ஸஹீஹ் முஸ்லிம் ஒரு பார்வை*!

Image
*ஸஹீஹ் முஸ்லிம் ஒரு பார்வை*! கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள் சஹிஹான ஆறு கிரந்தங்களுள் இரண்டாவது இடத்திலிருப்பது சஹி முஸ்லிம் என்ற கிரந்தமாகும். இமாம் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆழ்ந்த முயற்சிக்குப் பின் இத்தொகுப்பை செய்து முடித்தார்கள். நூலின் தொகுப்பு, ஒழுங்கின் அழகு என்ற அடிப்படையில் நோக்கி்னால் சஹி முஸ்லிம் கிரந்தம் சஹீஹுல் புகாரியைவிட உயர்ந்து காணப்படுகின்றது. ஆரம்ப காலம்தொட்டு இது நாள்வரை இந்நூல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதே இந்நூலின் சிறப்புக்குரிய அங்கீகாரமாகும். ஹதீதுத் துறையில் ஆழ்ந்த புலமைபெற்ற பலர் சஹி முஸ்லிம் தொகுப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். புகாரி ஷரீபைவிட இதற்கு முக்கியத்துவம் கொடுத்துமிருக்கின்றார்கள். இமாம் அபூஅலி ஹாகிம் நைஸாபூரி, ஹாபிழ் இமாம் அப்துர் ரஹ்மான் நஸாஈ அவர்கள் புகாரி ஷரீபை விட சஹி முஸ்லிம் உயர்ந்தது என்று கூறுகின்றார்கள்.  இமாம் தாரகுத்னியின் சமகாலத்தவரான இமாம் முஸ்லிம் பின் காஸிம் குர்துபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகையில், இமாம் முஸ்லிமின் சஹி முஸ...

*திருக்குர்ஆனுக்கு* *அடுத்த* *மதிப்பு மிக்க* *நூல் ஸஹீஹுல்* *புகாரி ஷரீப் !* *ஒரு* *கண்ணோட்டம்!*

*திருக்குர்ஆனுக்கு* *அடுத்த* *மதிப்பு மிக்க* *நூல்* ஸஹீஹுல்* புகாரி ஷரீப்!*   *ஒரு*கண்ணோட்டம்!* கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இருபது நூற்கள் வரை எழுதியுள்ளார்கள். இவற்றுள் ஸஹீஹுல் புகாரி ஷரீப்மூலமே அவர்களுக்கு மங்காப் புகழ் கிடைத்தது. ஸஹிஹீல் புகாரி ஷரிபுக்கு இமாமவர்கள் இட்ட பெயர் அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முக்தார் மி்ன் உமூரி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வஸுனனிஹி வஅய்யாமிஹி ஆகும்.  ஒரு ஹதீஸ் கிதாபிற்கு ஜாமிஉ என்று பெயர் வைப்பதாயின் பின்வரும் எட்டுத் தலைப்புக்குள் ஹதீதுகள் இடம்பெற வேண்டும். அவையாவன. 1. ஈமான்  2. அஹ்காம் (சட்டங்கள்)  3. ஸியர் யுத்தம்  4. தப்ஸீர்  5. ஆதாப்  6. மனாகிப்  7. பிதன், குளப்பம்  8. அஷ்றாத் ஸஆத் - இறுதி நாளின் அடையாளங்கள். புகாரி ஷரீபுக்கு அல்லாஹுத்தஆலா கொடுத்துள்ள கண்ணியத்தைப் போன்று வேறு எந்த ஒரு இஸ்லாமிய நூலுக்கும் இதுவரை அல்லாஹ் வழங்கவில்லை. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஏனைய நூற்களுக்கு...

*கெட்ட உறவு* *நட்டத்தில் போய் முடியும்!*

*கெட்ட உறவு* *நட்டத்தில் போய் முடியும்!* கலீபத்துல் காதிரி அல்ஹாஜ் .பாஸில்                          ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி . பரேலவி .ஸூபி நக்ஷ்பந்தி அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். அநியாயக்காரர்களுடன் உறவாடி உட்கார வேண்டாம். சிறு வார்த்தைக்குள் விரிந்த, ஆழ்ந்த விளக்கத்தைக் கொடுப்பது திருக்குர்ஆனின் அற்புதத்தில் ஒன்று. மேற்படி  திருவசனமும் இந்த வகையைச் சேர்ந்ததாகும். இதன் ஒவ்வொரு வார்த்தையும் விரிந்த பொருளைக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை இத்திருவசனம் தன்னுள் பொதிந்து நிற்கின்றது. ஈமான் கிரிகை (அமல்)கள் போன்று குப்று, பயங்கரவாதம் உள்ளிட்ட விடயங்களையும் இத்திருவசனத்தின் மூலம் நோக்கப்பட வேண்டியவைகளாகும். குப்றும், பயங்கரவாதமும் தீய செயல்களின் அச்சாணிகளாகும். அநியாயக்காரர்களுடன் உறவாடி உட்கார வேண்டாம் என்பதில் உறவாடல் ஏனைய தொழுகை, நோன்பு உள்ளிட்ட கிரிகைகளினால் கிட்டும் தாக்கத்தை விட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல்மிக்கவை என்பது புலனாகின்றது. இதனை பின்வருமாறு ஆராயலாம். நோன்பு ஒருவனை ...

*ஜின்களின் தீங்கிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்!*

*ஜின்களின் தீங்கிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்!*  கலீபத்துல் காதிரி அல்ஹாஜ் .பாஸில்      ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி . பரேலவி .ஸூபி நக்ஷ்பந்தி ஜின்கள் பற்றி அல்குர்ஆன் அல்ஹதீஸில் ஏராளமாகக் கூறப்பட்டுள்ளன. ஜின்கள் நெருப்பினால் படைக்கப்பட்டுள்ளன. அன்னை ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் ஒரு ஹதீஸில், மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பினால் படைக்கப்பட்டுள்ளனர். உங்களுக்கு வர்ணித்துக் கூறப்பட்டதிலிருந்து ஆதம் படைக்கப்பட்டார். ஆதாரம்  :  சஹி முஸ்லிம் ஹதீஸ் எண் 2994 மனிதன் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜின்கள் படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மலக்குகள், மனிதர்கள் போன்றில்லாமல் தீய சுபாவம் மிகைத்தவர்களாக உள்ளனர். மனிதனின் பார்வையில் படாமல் மறைந்திருப்பதால் இவர்களை ஜின்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்கருத்தினை இப்னு அகீல் பின்வருமாறு கூறுகின்றார். ஜின்கள் மனிதனின் கண்ணில் படாமலும் மறைந்து வாழ்வதாலுமே இவர்களை ஜின் என்று கூறப்படுகின்றது. தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஜனீன் என்று கூறப்படுவதற்கு அக...

*மாமறை விளக்கும் மாநபி*!

 * மாமறை விளக்கும் மாநபி*! கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள். இறைத் தூதுவர்கள் தமது சத்திய முழக்கத்தை மக்களுக்கு முன்னே, வைத்தபோது அம்மக்கள் அதனை ஏற்கமறுத்து அவர்களை எள்ளி நகையாடினர். அவதூறுகளை அள்ளி வீசினர். அப்பொழுதெல்லாம் பொல்லாங்கு உரைத்த புல்லர்களுக்கு அந்தந்த நபிமார்களே பதிலடிகள் கொடுத்தனர். ஆனால் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கெதிராக அவதூறுகள் கிளப்பிய மக்களுக்கு இறைவனே தன் புறத்திலிருந்து சாட்டையடி கொடுத்தான். அருள்மறையாம் திருமறை அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இந்நிகழ்ச்சிகள் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றை கீழே தருகின்றோம். நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூதாயத்தினர் நூஹ் நபியவர்களை நோக்கி நீர் பகிரங்கமான வழிக்கேட்டில் இருப்பதை மெய்யாகவே நாங்கள் காண்கின்றோம்.          (அல்குர்ஆன் - 07 : 60) என்று கூறியபோது நபியவர்கள் என்னுடைய மக்களே! நான் எத்தகையே வழிகேட்டிலும் இல்லை. எனினும் நிச்சயமாக நான் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷிக்கும் இறைவன் புறத்திலிருந்து வந்த ஒரு த...

*மண்ணறையின் மர்மங்கள்.*

*மண்ணறையின் மர்மங்கள்.* கலீபத்துல் காதிரி அல்ஹாஜ் .பாஸில்                            ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி . பரேலவி .ஸூபி நக்ஷ்பந்தி மெய்யாகவே எவர்கள் விசுவாசம் கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும் சரி, இம்மை வாழ்விலும் சரி (கலிமா தையிப் என்னும்) மெய்யான இந்த வாக்கியத்தின் பொருட்டால் அல்லாஹ் அவர்களை ஸ்திரப்படுத்துகின்றான்.  (அல்குர்ஆன் - 14 : 27) மேற்கண்ட திருவசனம் கப்றின் வேதனை தொடர்பாக இறங்கியது. இங்கு முக்கியமாக சில விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 1. கப்று வேதனை யாருக்கு உண்டு. அதன் யதார்த்தம் யாது? 2. கப்றின் விசாரணை எவ்விதம் நடக்கும்? 3.இதிலிருந்து பெறப்படும் நன்மைகள் எவை? 1. கப்றின் விசாரணை வேறு, கப்றின் தண்டனை என்பது வேறு. விசாரணை யாவருக்குமில்லை. தண்டனையும் அனைவருக்கும் கிடையாது. கப்றின் விசாரணை எட்டு தரப்பாருக்கு இருப்பதில்லை. 1. நபிமார்கள் 2. ஷுஹதாக்கள் 3. யுத்தத்திற்கு தன்னைத் தயார் செய்பவர் 4.குழந்தைகள்  5.ஜும்ஆ தினத்தில் மரணிப்பவர்  6. ஜும்ஆ இரவில் மரணிப்பவர்  7. மரணத்தின் நின...

*ஈமானியக்* *கோட்பாட்டின்* *எதார்த்தம்*!

Image
*ஈமானியக்* *கோட்பாட்டின்* *எதார்த்தம்*!  கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள் ஈமான் என்பது அம்னு என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். பாதுகாப்பு என்பது இதன் அகராதிப் பொருள். ஷரீஅத்தில் நம்பிக்கை சார்ந்த குறிப்பிட்ட சில கோட்பாட்டு வி்டயங்களை விசுவாசிப்பதைக் குறிக்கின்றது. இக்கோட்பாட்டை ஏற்கும் ஒருவர் நரகத்தின் கொடிய தண்டனையிலிருந்து பாதுகாப்பாக இருப்பார். ஒரு தினம் வானவர் திருத்தூதர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, ஈமான் என்றால் என்ன? இஸ்லாம் என்றால் என்ன? இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் விடைபகர்ந்தார்கள். அதில் ஈமான் என்றால் என்ன? என்ற கேள்விக்கு, அல்லாஹ்வையும், மலக்குகளையும், வேதங்களையும், றஸூல்மார்களையும், இறுதி நாளையும் நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் விதிப்படி நடக்கும் என்றும் நம்புவது என்று விடை பகர்ந்தார்கள். மேற்படி ஹதீஸி்ல் கூறப்பட்டுள்ள ஆறு விடயங்களையும் மனதால் ஏற்று நாவினால் விண்ணப்பிப்பதை ஈமான் என்று கூறப்படும்.  ஈமான் இரு வகைப்படும் .   ஈமான...