அகிலத்தின் அருட்கொடை கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி — பரேலவி) அவர்கள் நாமே! உம்மை அகிலங்களின் அருட்கொடையாகவே நாம் அனுப்பியுள்ளோம் (அல்குர்ஆன்) முத்திரை நபியான முத்து முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலங்களின் அருட்பிளம்பாக உள்ளார்கள் என்பதையும், இது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுக்குரிய தனித்துவமான பண்பு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் நன்கு அறிவர். ஆலமீன் என்பது மனிதன், ஜின், மலக்குகள் உள்ளிட்ட அல்லாஹ் தவிர உள்ள பிரபஞ்சம் அனைத்தையும் உள்ளடக்கும் ஒரு சொல்லாகும். றிஸாலத் என்ற தூதுத்துவத்தின் மூலமே நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அகிலத்தின் அருளாக அருளப்பட்டுள்ளார்கள். அன்னாரின் தூதுத்துவம் - றிஸாலத் - அகிலங்களுக்கு பொதுமையாகவே உள்ளது. அதனை நபியவர்களே படைப்புக்கள் அனைத்திற்கும் பொதுவாக அனுப்பப்பட்டுள்ளேன் (முஸ்லிம்) என்று குறிப்பிட்டுள்ளார்கள். றிஸாலத்துவம் எப்படி அனைத்து படைப்புக்களுக்கும் பொதுவானதோ அப்படியே அவர்களின் றஹ்மத்தும் பொதுவானதாகும். றஹ்மத் என்பதற்கு றாஹிம் என்ற பொருள் கொடுத்து நபியே...
Comments
Post a Comment